*மூவர் தந்த நான்காம் பரிசு*
பொன்னுடன் பொன்னான நேரத்தை கொண்டு வந்தோரே
தங்கத்துடன் தங்க மனங்களை தர வந்தோரே
தூபத்துடன் தூய தாழ்ச்சியை
காணிக்கையளித்தோரே
தூப புகை போல தம்மை மறைத்து உயர்வடைந்தோரே
வெள்ளைப்போளம் போல வெண் மனங்கொண்டோரே
வெள்ளைப்போள பயன் போன்று தியாக நெஞ்சத்தினரே
உம்மைப் போல யாமும்
பொன்னான நேரத்தையும்,
தங்கமான காலத்தையும்,
தூபமான தியாகத்தையும்,
நறுமண உழைப்பையும்,
மாசற்ற நல்மனதையும்,
தூய்மை நல்லுரைகளையும்
நான்காம் பரிசாக இறைவனுக்களிக்க
துணையாகுமே...
*நான்காம் பரிசு புத்தக சாராம்சம்*
அன்புடன்
கஸ்மீர் ரோச்