*உலக விதிகளை மீறிய மன்னர்*
அரசு என்றால் மாளிகை உண்டு
நம் அரசர் பிறந்ததே ஏழ்மையில் தானே....
அரசு என்றால் ஆற்றல் உண்டு
நம் அரசர் ஆற்றலை துறந்தவர் தானே...
அரசு என்றால் படை பலம் உண்டு
நம் அரசர் ஏழைகளின் நண்பர் தானே...
அரசு என்றால் மகிமை உண்டு
நம் அரசர் மகிமையை மறைத்தவர் தானே...
அரசு என்றால் ஆட்சி உண்டு
நம் அரசர் இறையாட்சியை
உருவாக்கியவர் தானே...
அரசு என்றால் கிரீடம் உண்டு
நம் அரசர் நம் பாவ
முள் கிரீடம் அணிந்தவர்தானே....
மன்னர் என்றால் மார்புக்கவசம உண்டு
நம் அரசர் நமக்காக மார்பில் நொறுங்கியவர் தானே....
*ஆனால்*
மன்னர் என்றால் எல்லை உண்டு
நம் மன்னர் உலகுக்கே மன்னர்
மன்னர் என்றால் ஒரு பிரிவு மக்கள் உண்டு
நம் அரசருக்கு எல்லையில்லா மக்கள்
மன்னர் என்றால் சாம்ராஜ்யம் உண்டு
நம் அரசருக்கு சகலமும் அவரின் அசைவில்....
அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா !
உம் அரசாட்சியின் உரிமை மக்களாய் எமை காத்திடுமே...
இறையாட்சியின் விழுமியங்களை நாளும் நிலைநிறுத்த துணையாடுமே....
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007