*உறுப்புகளில் சிறியதே....**
உறவுகளை நேசிப்பதும் நீயே....
உணர்வுகளை காயப்படுத்துவதும் நீயே...
சீர்திருத்த கருத்துகளையும் பகர்கிறாய்..
சீரழிக்கும் செயலையும் செய்கிறாய்..
உடலுக்கு உகந்தவையும்
சுவைக்கிறாய்...
உடலைக் கெடுப்பதையும் ருசிக்கிறாய்...
இறை வேண்டலில் ஆவியானவரை துதிக்கிறாய்...
இகழ்ந்து வசைச் சொல் சொல்லி வதைக்கிறாய்..
அதெப்படி....
ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நீரூற்றில் நல்லநீர் மட்டும் தானே வரும்....
மாறுபட்ட நீர் வராதே...
ஆவியானவரால் வழிநடத்தப்பட்ட விளக்குத்தண்டில் ஒளிமட்டும் தானே பிரகாசிக்கும்.....
இருளும் ஒளியும் ஒருசேர தோன்றுமா...
இதோ....
*நன்நாக்கு அழியா
நம் நாயகன் தூய அந்தோனியாரைப் போன்று*
நாவடக்கம் கொள்வோம்
நாவினால் அவர் பணிதொடர முயல்வோம்
நாவை தூய்மையாக்குவோம்
நாவினால் நல்லன மட்டுமே பகர்வோம்
நாவினை நாளும் நயமாக வைத்திருப்போம்.
அன்பின் இறைவா,
எம் நாவினை
வல்லமையுள்ள,
இனிமையுள்ள,
வலிமையுள்ள,
நாவாக மாற்றுமே!
நல்லன சொல்லவும்,
நயம் பகரவும்
நாளும் நற்சொல் பகரவும் காத்திடுமே.
அன்புடன்,
கஸ்மீர் ரோச்
9382709007
No comments:
Post a Comment